சென்னையில் 30 மணி நேரம் ஊரடங்கு...! வெளியே சுற்றினால் உள்ளே தான்...!
சென்னை: சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், சென்னையில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக, சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணிவரை 30 மணிநேர முழு ஊரடங்கை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 17 காலை 6 மணி வரை தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.
அதன்படி, இன்று (ஆக.16) பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தொரு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. தடைகளை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இது தொடர்பாக சந்தேகங்களுக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.