தமிழக சட்டசபை கூடும் தேதி அறிவிப்பு…! ஆனா ஒரு கண்டிஷன்….!
சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில், சட்டசபை கூட்டத்தொடர், வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்க உள்ளது. ஆளுநர் உரைக்கு பிறகு, சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.
இது குறித்து சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஜனநாயக முறையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். கட்சி அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள் நடத்தப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அனைவரையும் அரவணைத்து செல்வதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம். சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.