மறக்க முடியுமா...? இன்று கார்கில் போர் நினைவு தினம்..! வைப்போம் ஒரு சல்யூட்
டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்றது கார்கில் போர். 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் நாட்டுக்காக தங்களது உயிரை இழந்தனர்.
ராணுவ வீரர்களுக்கு கவுரவிக்கும் விதமாகவும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று கார்கில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கார்கில் போரில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்ககள் உயிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.