சாடிஸ்ட் அண்ணாமலை…? யப்பா… சாமி…! இப்படியா திட்டுறது?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சாடிஸ்ட் சிந்தனை கொண்டவர் என்று காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைநகர் சென்னையை தவிக்க வைத்த மழை, தென் தமிழகத்தை பிரித்து மேய்ந்திருக்கிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி என மழையின் பாதிப்பு அதிகம்.
மக்களை காக்க வேண்டிய அரசு அதை செய்ய தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை வச்சு செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
அரசியல் செய்ய விரும்பல… மக்களுக்கான பணியே இப்போது முக்கியம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அமைச்சர்கள் களத்தில் நின்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். அவற்றில் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் சென்று வருவது சாதிய ரீதியான விமர்சனங்களை முன் வைக்க வாய்ப்பாகி மாறி இருக்கிறது.
அமைச்சருடன் அவருக்கு என்ன வேலை..? அவரு எம்எல்ஏவா? அரசின் மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரியா? எதற்கு இப்படி ஒரு விளம்பரம் என்று கூறி பொளந்து வருகின்றனர். மேலும் டெல்லியில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினையும் குற்றம்சாட்டி உள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு வேறு லெவலில் அவதானிக்கப்படுகிறது.
இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து காயத்ரி ரகுராம் சமூக வலை தளத்தில் பதிவை வெளியிட்டு உள்ளார்.அதில் அண்ணாமலையின் செயல்பாடுகளை விளாசித் தள்ளி இருக்கிறார்.
பதிவில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சினிமா இயக்குனர், தேவேந்திர குல வேளாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை ஆதரிப்பதாக கோபமா? யார் வேண்டுமானாலும் களத்திற்குச் சென்று வேலை செய்யலாம்.
சினிமாக்காரர்கள் உங்களுக்கு உதவினால் கோபம், சினிமாக்காரர்கள் உதவாவிட்டால் உங்களுக்கு கோபமும் வரும். இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கத் தவறியது ஏன், ஏன் முன்பே அறிவிக்கவில்லை?
ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசு தேசிய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை சோதனை செய்தது. எங்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. என்ன பயன்? தமிழகத்திற்கு ஏன் பயன்படுத்தப்படவில்லை?
தமிழ்நாடு ஒரு பேரழிவை சந்திக்கும் என்று மோடி எதிர்பார்த்தாரா அது அவருடைய நோக்கமா? அதனால்தான் மோடி காசி தமிழ் சங்கத்தில் பிஸியாக இருந்தார்.
உ.பி.யில் 19 கோடி திட்ட பட்ஜெட்டை அறிவிக்க, நீங்கள் அதை ஆதரிப்பதில் மும்முரமாக இருந்தீர்களா? பேரழிவை சரிபார்க்க அவர் ஒருமுறை தமிழகம் வந்தாரா? இந்த முறை செய்தி மூலம் ஒற்றை ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏன் இல்லை? பல வயதானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளத்தில் நடக்க முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கலாம். வெள்ளத்தில் நடமாட உடல்நிலை சரியில்லாத மற்ற எம்எல்ஏ அமைச்சர்களும் தனது பாதுகாப்பை கவனிக்கும்படி முதல்வர் கேட்டிருக்க வேண்டும். இப்போது இன்ஃப்ளூயன்ஸா, கோவிட், பன்றிக் காய்ச்சல் என பல நோய்கள் பரவி வருகின்றன.
மனிதநேயம் தேவை அண்ணாமலை. நீங்கள் சொல்வது தவறு. ஆனால் மற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற அதிகாரிகள் மீட்பு பணியில் உள்ளனர். இது செயற்கை மழையா, இயற்கை பேரிடரா என்பது தற்போது வரை சந்தேகமாக உள்ளது. வாக்குகளுக்காக இடங்களை அழிப்பதற்காக இப்படி நடக்கிறதா என்று அதுவும் சந்தேகம்தான்.
உங்கள் அரசியல் இங்கு தேவையில்லை அங்கு சென்று களப்பணி செய்யுங்கள். இயற்கை சீற்றங்களுக்காக திமுகவை மக்கள் வெறுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
உங்கள் எண்ணம் அதுவாக இருந்தால், அதனால்தான் நீங்கள் ஒதுங்கி உட்கார்ந்து மக்கள் துன்பத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறீர்கள் என்றால் அது சாடிஸ்ட் சிந்தனை என்றும் மோடி சாடிஸ்ட் சிந்தனை என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் அரசியலை மக்கள் அறிவார்கள் என்று காயத்ரி ரகுராம் கூறி இருக்கிறார்.