Sunday, May 04 12:44 pm

Breaking News

Trending News :

no image

ரஜினி பேரனை தேடிய சென்னை போலீஸ்…! இப்படி பண்ணலாமா…?


சென்னை; நடிகர் ரஜினிகாந்த் பேரனை சென்னை போலீஸ் திடீரென தேடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து பின்னர் பிரிந்து விட்டார். மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் தாய், தந்தை என இருவரும் வீட்டிற்கும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் யாத்ராவுக்கு தற்போது வயது 17. இவரின் ஒரே நடவடிக்கை சென்னை போலீசாருக்கு பெரும் தலைவலியாகி இருக்கிறது. அவரது வீட்டுக்கே சென்று சென்னை போலீசார் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது, யாத்ராவுக்கு 1000 ரூபாய் அபராத தொகை விதித்து அதிரடி காட்டி உள்ளனர்.

இது குறித்த விவரம் வருமாறு: யாத்ராவின் வயது 17 என்ற நிலையில் அவர் இரு சக்கர வாகனத்தை ஹெல்மெட் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டியது தெரிய வந்துள்ளது. இது உண்மை என்பதை விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர்.

போயஸ் கார்டனில் இருந்த கேமரா ஒன்றில் இதற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதன் பின்னரே யாத்ராவை தேடி அபராதத்தை வசூலிக்க வீட்டுக்கு சென்றிருக்கின்றனர்.

Most Popular