ஆட்டுக்குட்டி அண்ணாமலை…! தலையை சீவி விடுவாயா?
சென்னை; பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் இன்றைக்கு ஹாட் டாபிக் ஆக மாறி இருக்கிறது.
டாஸ்மாக் விவகாரத்தை தொடர்ந்து ஆவினை கையில் எடுத்து பாஜக அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. ஆவின் பச்சை பாக்கெட் பால் நிறுத்தம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம் என்று பாஜக மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது.
வடநாட்டு பால் நிறுவனங்களிடம் காசு வாங்கி கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்து அண்ணாமலை ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
திரு. @Manothangaraj அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.
ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு என்று கூறி இருந்தார்.
இதற்கு பதிலடியாக அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு பதிவை வெளியிட்டு அதிரடி காட்டி இருக்கிறார். அதில் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி, ரபேல் வாட்ச் என்று போட்டு தாக்கி உள்ளார்.
அந்த பதிவில் இடம்பெற்றுள்ள வரிகள்;
ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது.
மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!
என்று அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டு உள்ளார்.