Sunday, May 04 12:37 pm

Breaking News

Trending News :

no image

ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரா..? தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!


 சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ள விவரம் வருமாறு: ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் 5,000 ரூபாயில் இருந்து 6,250 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கடையில் ஓராண்டு பணியை முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக 8,600 ரூபாயில் இருந்து 29,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் 4,250 ரூபாயில் இருந்து 5,550 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணியை முடித்தவர்களுக்கு 7,800 ரூபாயில் இருந்து 26,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Most Popular