Sunday, May 04 11:48 am

Breaking News

Trending News :

no image

ஸ்டாலினுக்கு புது பெயர்…! கிண்டல் பண்ணிய ராமதாஸ்…! கடுப்பில் உ.பி.க்கள்…


சென்னை: ஸ்டாலினுக்கு மதுநீதிச் சோழன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெயர் சூட்டியிருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் கடுப்பை வரவழைத்து இருக்கிறது.

கொரோனா தளர்வுகள் அனைத்தும் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதில் முக்கிய அம்சமாக டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டு இருக்கின்றன. கள்ளச்சாராயம், போலி மது ஆகியவற்றை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று மதுக்கடைகள் திறப்புக்கான காரணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

ஆனால் மறுபக்கம் பல்வேறு கட்சிகள் திமுகவையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் இஷ்டத்துக்கு வசைபாடி வருகின்றன. அதிலும் குறிப்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஸ்டாலினுக்கு புது பெயர் வைத்து கண்டிக்க, திமுகவினர் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

நேற்று தான் டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இன்றைக்கும் ஒரு முகநூல் பதிவை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:

அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது. அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர். அந்த பசு கூறியது," மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார்.

நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்" என்று பசு முறையிட்டது. மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, '' நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்" என்று கட்டளையிட்டார். அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர்.

பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர். மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர்.

அதைப் பார்த்த மற்றவர்கள், '' பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்" என்று கதையளந்தனர்.

ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிக் களிப்புடன் அரண்மனைக்கு திரும்பினர். எங்கோ ஒரு மூலையிலிருந்து முழக்கம் எழுந்தது. "எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!" என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அதாவது ஸ்டாலினுக்கு மதுநீதிச் சோழன் என்று பெயர் சூட்டி பதிவிட்டு உள்ளார்.

Most Popular