உடன்பிறப்புகளுக்கு அண்ணாமலை லெட்டர்..! பொய் சொல்றீங்களே…!
சென்னை: கேலோ இந்தியா விவகாரத்தில் திமுக பொய் சொல்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அண்ணாமலை கூறி இருப்பதாவது: கேலோ இந்தியா (Khelo India) திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
ஆனால், இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்துகொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்கு தலைகுனிவு.
இது ஒரு demand driven திட்டம். மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதிப்பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர்.
மாநிலப் பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.