எனக்கு கொரோனா..! டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!
சென்னை: தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.