23 தொகுதிகள் ஒதுக்கீடு...! பாமகவினருக்கு ராமதாஸ் போட்ட அதிரடி டுவீட்…!
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டு மொத்த வன்னியர்களின் களப்பணியும் அமைய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்.அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.