Sunday, May 04 01:01 pm

Breaking News

Trending News :

no image

அப்பா நலமுடன் இருக்கிறார்... விரைவில் மீண்டு வருவார்..! எஸ்.பி.பி.சரண்


சென்னை: கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், ' அப்பா நலமுடன் இருக்கிறார். விரைவில் மீண்டு வருவார்' என கூறியுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், ' அப்பா நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பால் தற்போது உடல் நலத்துடன் மீண்டு வருகிறார்.

விரைவில் நலமுடன் அப்பா திரும்பி வருவார். தற்போது 60 சதவீத ஆக்சிஜன் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. ரத்தம் சீராக இருக்கிறது. மருத்துவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்களும் நம்பிக்கை வைத்துள்ளோம்.' என கூறியுள்ளார்.

Most Popular