Sunday, May 04 01:00 pm

Breaking News

Trending News :

no image

என்ஜினியரிங் அட்மிஷன்..! மாணவர்களுக்கு அவகாசம் தந்த அண்ணா பல்கலைக்கழகம்


சென்னை: பொறியியல் படிப்புகளில் வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30 வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்றால் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பி. .,பி. டெக்., பி. ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வந்தது.

அதற்கான விண்ணப்பப் பதிவு அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறமாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிஇ, பிடெக், எம்சிஏ, பி ஆர்க் ஆகிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை, செப்டம்பர் 30ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Most Popular