Sunday, May 04 11:51 am

Breaking News

Trending News :

no image

ஸ்டாலின் சொன்ன ‘ஒத்த’ வார்த்தை…! மன்னிப்பு கேட்ட திமுக எம்பி


சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்ததை தொடர்ந்து திமுக எம்பி செந்தில்குமார்  மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளை மேலும் யோசிக்க வைத்துள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியான தருணத்தில் திமுக எம்பி செந்தில் குமார் ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அந்த வார்த்தை பெரும் விவாதம் ஆனதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் எம்பி செந்தில்குமாரின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து மன்னிப்பும் கேட்குமாறு கூறினார். இதையடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது;

நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார். செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், “முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.

பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமைகண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையின் கண்டிப்பை தொடர்ந்து எம்பி செந்தில்குமாரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். 

Most Popular