பீகாரில் வெல்கிறார் நிதிஷ்குமார்…! உதவி பாஜக…!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறிகின்றன.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் நேரடிப் போட்டி உள்ளது.
லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் எடுத்த கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிதிஷ் செல்வாக்கு சரிந்திருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி என்பதால் அவருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 133 முதல் 143 இடங்கள் வரை வெல்லக்கூடும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான 5 கட்சிகளின் மெகா கூட்டணிக்கு 88 முதல் 98 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் கருத்துக் கணிப்பில் தேஜஸ்வி யாதவ் புகழ் நிதிஷை விட நான்கு சதவீதம் குறைவாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 10 வாக்காளர்களில் மூன்று பேர் நிதிஷ்குமாரை முதல்வராக விரும்புகிறார்கள், 27 சதவீதம் பேர் 30 வயதான தேஜாஷ்வி யாதவை விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.