பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவ்…! நல்ல செய்தி சொன்ன மகன் சரண்
சென்னை: பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து உள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் கூறி வருகிறார். ஆனால் சில நாட்களாக அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவி, அவரது ரசிகர்களை சோகத்துக்கு கொண்டு சென்றன.
இந் நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இப்போது இல்லை என்றும் மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.
விரைவில் அவர் பூரண நலம் பெற்று திரும்பி வருவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதாகவும், தந்தையின் உடல்நலம் மீது அக்கறை கொண்டு, நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் எஸ்பிபி சரண் கூறி உள்ளார்.