சாத்தான்குளம் விசாரணை...! மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா
சாத்தான்குளம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதியானது.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு தூத்துக்குடிக்கு வந்தனர்.
வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 15 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோற்றால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கில் கைது கைது செய்யப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.