ஒன்றல்ல… 7 பேர்…! ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்…!
சென்னை: 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் மாற்றப்பட்டு உள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:
செந்தாமரை - நில நிர்வாக இணை ஆணையர்
மகேஸ்வரி ரவிக்குமார் - பொதுப்பணித் துறை இணைச் செயலாளர்
அருணா - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்
ஸ்வர்ணகுமார் ஜாதவத் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூடுதல் இயக்குனர்
ஆனி மேரி ஸ்வர்ணா - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர்
ஜான் லூயிஸ் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளர்
லட்சுமி - சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும சி.இ.ஓ