ரூ.1 கோடி பித்தலாட்டம்..! அஜித் பட இயக்குநருக்கு ஜெயில்…!
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, அஞ்சான் என பல படங்களை இயக்கியவர். தயாரிப்பாளராகவும் உள்ளார்.
எண்ணி ஏழு நாள் என்ற பெயரில் ஒரு தமிழ் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகி கார்த்தி, நாயகி சமந்தா. படத்துக்காக பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் ரூ.1.03 கோடி கடன் பெற்றிருந்தார்.
அதற்கான அவர் காசோலைகளையும் வழங்கி இருந்தார். கொடுத்த கடனை கேட்டபோது லிங்குசாமி தரவில்லை என்று தெரிகிறது. இதையடுதது, அவர் கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்த, பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது.
இதனால் பிவிபி நிறுவனம் இயக்குநர் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கை தொடர்ந்தது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனையை சைதை நீதிமன்றம் விதித்து இருக்கிறது.
அவரது சகோதரர் சபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக லிங்குசாமி தரப்பு கூறி இருக்கிறது.