நயன்தாராவுக்கு பேசிய பிரபல நடிகை திடீர் மரணமா..? தீயாய் பரவிய தகவல்…!
சென்னை: நடிகை தீபா வெங்கட் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக வெளியான தகவல் தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகை தீபா வெங்கட். சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர். பிரபல நடிகைகளான நயன்தாரா, ஜோதிகா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் டப்பிங் குரல் கொடுத்தவரும் இவர்தான்.
இந் நிலையில் தீபா வெங்கட் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் இணையத்தில் தீயாய் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று அவரது தாயார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தீபா வெங்கட் தாய் கூறி இருப்பதாவது: மகள் தீபா வெங்கட் நலமுடன் தான் இருக்கிறார். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. யார் இதுபோன்ற போலித்தனமாக வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம். எனது மகள் நலமாக உள்ளார் என்று கூறி உள்ளார்.