Sunday, May 04 12:03 pm

Breaking News

Trending News :

no image

சபாஷ்… உங்க பின்னாடி நாங்க இருக்கோம்… ஸ்டாலினை பாராட்டிய முக்கிய பிரமுகர்


சென்னை:சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மத்திய அரசால் வாய்ப்பு மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்ற அறிவிப்பை பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றுள்ளார்.

டெல்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்திகள் மறுக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.

அதேநேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர்  வெளியிட்ட அறிவிப்பின் வருமாறு:

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் நிகழாண்டு தலைப்புஇந்தியா 75’. இந்த நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றுகின்ற வகையில், அலங்கார ஊா்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தெரிவுக் குழு முன்பாக சமா்ப்பிக்கப்பட்டது. மூன்று முறை அவா்கள் கூறிய திருத்தங்கள் செய்யப்பட்டன. நான்காவது கூட்டத்துக்கு எந்தவொரு காரணமும் இன்றி அழைக்காமல் அதுகுறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் இருந்து விட்டனா்.

இப்போது தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தியை நிராகரித்திருப்பது குறித்த எனது வருத்தத்தை பிரதமருக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்தேன். இதனிடையே, அலங்கார ஊா்தி அணிவகுப்பு தொடா்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் வேறெந்த மாநிலத்துக்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப் போரில் தமிழகம் 250 ஆண்டுகாலத் தொடா் பங்களிப்பைச் செய்துள்ளது. முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூா் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிா்ப்பு வரலாற்றில் முக்கியத் தொடக்கமாகும். அதேபோன்று, ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, ஆங்கிலேயா்களைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவா், வீரத்தாய் வேலுநாச்சியார்.

ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரா்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்காத வீரத் திருமகன்களை விடுதலைத் தியாகத்துக்கு தந்தது தமிழ்நாட்டின் மண்ணாகும். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில்தான் நமது அலங்கார ஊா்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயா்களை தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திர போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊா்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார ஊா்தி மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊா்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும், அண்மையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.

முதல்வரின் அறிவிப்புக்கு தமிழகத்தில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சொந்த கட்சியினர் மட்டுமல்லாது மற்ற கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.

இந் நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் செயல்பாடுகளை சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பாராட்டி உள்ளார். வரவேற்பும் தெரிவித்துள்ள அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

நமது வரலாறை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? முதலமைச்சர் அவர்களே! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால் என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular