இருமலுக்கு எதிரி இந்த புதினா ரசம்...! குடிச்சு பாருங்க, குதூகலம் ஆகிடுவீங்க...!
சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளுக்கு நல்ல மருந்து புதினா. அதிலும் புதினாவுடன் மிளகு , சீரகம் தட்டி போட்டு ரசம் வைச்சா எப்படி இருக்கும். இந்த ரசத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது தான் ஸ்பெஷல்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
புதினா – ஒரு கப்
புளி – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டிஸ்பூன்
மிளகு – ஒரு டிஸ்பூன்
சீரகம் – ஒரு டிஸ்பூன்
மஞ்சப்பொடி – ¼ டிஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேல்லிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – ஒரு டிஸ்பூன்
கடுகு – ½ டிஸ்பூன்
சீரகம் – ½ டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
செய்முறை:
புதினா மற்றும் தக்காளி பாதியை நன்கு அரைத்து கொள்ளவும் . கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த புதினா பேஎஸ்ட், புளி தண்ணீரை ஊத்தி காய்ச்ச வேண்டும். கிண்ணத்தில் மீதி தக்காளியை கரைத்து அரைத்த மிளகு சீரகத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். சிறிது அளவு உப்பு , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைத்துள்ள புதினாவை சேர்க்க வேண்டும். மஞ்சள்தூள் மறக்காமல் சேர்கக வேண்டும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பொங்கி வரும் நேரத்தில் ½ கப் தண்ணீரை ஊற்றி அணைத்து, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து ரசத்தில் ஊற்றி கொள்ளலாம்.